தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், பேடரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 56 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பொன்நாகேஷ் தலைமையில் கல்விச் சுற்றுலாவிற்காக இன்று காலை இரயில் மூலம் புதுச்சேரி வந்தனர்.
புதுச்சேரி வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா இரயில் நிலையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக இலக்கிய அணி அமைப்பாளர் சீனுமோகன்தாசு, ஆசிரியர்கள் நெடுஞ்செழியன், பழனி, சீனுவாசன், பிஆர்டிசி சண்முகம், பாலு, குமார், கஜேந்திரன், முருகையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் காமராஜர் மணிமண்டபத்தில் புத்துணர்ச்சி பெறும் அவர்கள் புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் மூலம் புதுச்சேரியின் கல்வி வளர்ச்சி குறித்த தகவல்களை சேகரிக்கும் கல்விச் சுற்றுலாவை மேற்கொள்ள உள்ளனர். இன்று ஒரு நாள் சுற்றுலா மேற்கொள்ளும் மாணவர்களுக்கு தேவையான பேருந்து வசதி, உணவு ஆகியவைகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஏற்பாடு செய்துள்ளார். காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை சுற்றுலா மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழு இன்று இரவு புதுச்சேரியில் இருந்து இரயில் மூலம் ஓசூர் செல்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை பிஆர்டிசி பாஸ்கர் செய்திருந்தார்.
2019-04-04