`தமிழகத்தில் பாஜகவுக்கு பெருகும் ஆதரவால் சிலருக்கு பயம் ஏற்பட்டுள்ளது!” – கல்பாக்கத்தில் கர்ஜித்த பிரதமர் மோடி

கல்பாக்கத்தில் இன்று அதிவேக ஈனுலைத் திட்டத்தை இன்று துவங்கி வைத்த பிரதமர் மோடி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ஒவ்வொருமுறை சென்னை வரும்போதும் எனக்கு உற்சாகம் பிறக்கிறது. பாரம்பர்யம் மற்றும் வணிகத்துக்கு மையப் புள்ளியாக சென்னை விளங்குகிறது. சென்னை நகரம் திறன்கள் நிறைந்த இளைஞர்களால் நிரம்பியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் சென்னைக்கு முக்கியப் பங்கு உள்ளது. எனக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது. தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. நான் தமிழகத்துக்கு வருவதால் சிலருக்கு அச்சம் ஏற்படுகிறது. தமிழ்நாடு மற்றும் சென்னையின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு உழைத்து வருகிறது. சென்னை மக்களின் தேவைகளை தி.மு.க பூர்த்திசெய்யவில்லை. மக்களின் துயரங்களைப் பற்றி தி.மு.கவுக்கு கவலையில்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *